உள்ளூர் செய்திகள் (District)

ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

Published On 2022-10-25 09:48 GMT   |   Update On 2022-10-25 09:51 GMT
  • முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்
  • 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

திருப்பத்தூர்:

தமிழக அரசு சிறு குறு நடுத்தர தொழில்கள் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தகம் மூலம் பள்ளி கல்வித்துறை மற்றும் யூனிசெப் இணைந்து ஆசிரியர்களுக்கு பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையொட்டி திருப்பத்தூர் மாவட்டம் அறிவியல் ஆசிரியர்களுக்கு பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சி திருப்பத்தூர் விஜய்சாந்தி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

அனைவரையும் ஆசிரியர் எம்.சுரேஷ் குமார், வரவேற்றார். திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர். மதன்குமார் தலைமை வகித்து ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் அமுதா முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் முதல்வர் பாபு மற்றும் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

ஆசிரியர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி சார்ந்த கருத்துக்கள் மாவட்ட தொழில் முனைவோர் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் யுனிசெப் நிறுவனம் சார்பாக சித்தார்த் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கினார்கள்

பயிற்சியில்100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் எம்.பி. இளவரசி நன்றி கூறினார்.

Tags:    

Similar News