உள்ளூர் செய்திகள் (District)

திருப்பத்தூரில் லியோ சிறப்பு காட்சி தியேட்டர்களுக்கு கட்டுப்பாடு

Published On 2023-10-18 09:17 GMT   |   Update On 2023-10-18 09:17 GMT
  • ஒரு நாளைக்கு 5 காட்சிகள் மட்டுமே நடத்திட அரசு ஆணை
  • கலெக்டர் தகவல்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் லியோ திரை ப்படத்தினை திரையிடும் திரையரங்குகளில் நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை கூடுதலாக சிறப்புக் காட்சி (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) நடத்திடவும், தொடக்க காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்கும் முடிவடையும் வகையில் திரையிடுமாறு அரசு ஆணைகள் வெளியிட்டுள்ளன.

மேற்காணும் விதிமுறைகளை பின்பற்றவும், ஏதேனும் புகார்கள் இருப்பின் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டு அறை (04179-222211) மற்றும் காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு (04179-221103) தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News