உள்ளூர் செய்திகள் (District)

ஒரே நாளில் 3 பாம்புகள் மீட்பு

Published On 2023-10-25 08:09 GMT   |   Update On 2023-10-25 08:09 GMT
  • தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்
  • காப்பு காட்டில் விடப்பட்டது

ஆலங்காயம்:

வாணியம்பாடி தர்மராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 5 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் ஆலங்காயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று சாரைபாம்பை பிடித்தனர். அதேபோல் ஆலங்காயம் அடுத்த மிட்டூர் பகுதியில் மெக்கானிக் கடையில் புகுந்த 7 அடி நீளம் உள்ள சாரை பாம்பு மற்றும் ஆலங்காயம் படகுப்பம் வண்ணாங்குட்டை பகுதியில் வீட்டின் அருகில் இருந்த 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பையும் தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.

பிடிபட்ட 3 பாம்புகளும் ஆலங்காயம் வனத்துறையினர் ஒப்படைக்கப்பட்டு, காப்பு காட்டில் விடப்பட்டது.

Tags:    

Similar News