உள்ளூர் செய்திகள் (District)
மழைநீரில் அமர்ந்து விவசாயி நூதன முறையில் போராட்டம்
- அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரம்
- பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த கே. பந்தாரப்பள்ளி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் விவசாயி.
இவரது வீட்டின் அருகே மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது இதனால் கொசுக்கள் உற்பத்தியாகிறது மேலும் மழைநீர் துர் நாற்றம் வீசி வருகிறது.
இது சம்பந்தமாக தேங்கியுள்ள மழைநீரை அகற்ற கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயி மாணிக்கம் தனது வீட்டின் எதிரில் தேங்கியுள்ள மழைநீரில் அமர்ந்து மழைநீர் அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் யாரும் வராததால் விவசாயி மழைநீரில் அமர்ந்து எழுந்து சென்றார்.
இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.