உள்ளூர் செய்திகள் (District)

ெரயில் மோதி வாலிபர் சாவு

Published On 2023-11-02 08:35 GMT   |   Update On 2023-11-02 08:35 GMT
  • தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பரிதாபம்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

ஜோலார்பேட்டை:

கோயம்புத்தூர், சாமய்யர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 37), தனியார் கம்பெனி காசாளர். இவரது மனைவி பிரேமலதா (30). தம்பதியினருக்கு 5 வயதில் மகள் உள்ளார்.

இந்த நிலையில் செந்தில் நேற்று திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ஏ.கஸ்பாவில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி கோவையில் இருந்து சென்னை சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

ஆம்பூர் ரெயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரப்பிசாகர் எக்ஸ்பிரஸ் ரெயில் செந்தில் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

செந்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஜோலா ர்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News