உள்ளூர் செய்திகள் (District)

கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-10-09 07:47 GMT   |   Update On 2023-10-09 07:47 GMT
  • குடும்ப பிரச்சினையில் விபரீதம்
  • போலீசார் வழக்கு பதிவு

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நாச்சாரகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 33), கட்டிட மேஸ்திரி.

இவரது மனைவி மஞ்சு (28). தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கணவன் -மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் 2 பேருக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் விரக்தியடைந்த பாண்டியன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News