உள்ளூர் செய்திகள் (District)

கவிந்த காரை மீட்ட காட்சி.

வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் கார் குப்புற கவிழ்ந்தது

Published On 2023-11-02 08:33 GMT   |   Update On 2023-11-02 08:33 GMT
  • டயர் வெடித்து விபத்து
  • 4 பேர் உயிர் தப்பினர்

ஆலங்காயம்:

சென்னை தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 3 இளைஞர்கள் பெங்களூ ரில் உள்ள அதே நிறுவனத்தின் கிளைzக்கு அலுவலக பணிக்காக கார் மூலம் பெங்களூர் நோக்கி சென்றனர்.

காரை சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 57) என்பவர் ஓட்டினார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தறிக்கட்டு ஓடி 2 முறை பல்டி அடித்து, குப்புற கவிழ்ந்து.

இதில் காரில் பயணம் செய்த 4 பேர் அதிர்ஷ்ட வசமாக சிறு காயமும் இன்றி உயிர்தப்பினர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதித்தது.

தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் காரை கிரேன் மூலம் அப்பு றப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

Tags:    

Similar News