உள்ளூர் செய்திகள் (District)

3 தாசில்தார்கள் பணியிடமாற்றம்

Published On 2023-10-27 08:12 GMT   |   Update On 2023-10-27 08:12 GMT
  • நிர்வாக காரணத்திற்காக மாற்றம் செய்யப்பட்டனர்
  • கலெக்டர் உத்தரவு

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் நிர்வாக காரணத்திற்காக 3 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி வாணியம்பாடி தாசில்தாராக பணியாற்றி வந்த சாந்தி, திருப்பத்தூர் நிலங்கள் மற்றும் கோவில் தனி தாசில்தாராகவும், இவருக்கு பதிலாக ஏலகிரிமலை தனி தாசில்தார் மோகன் வாணியம்பாடி தாசில்தாராகவும், திருப்பத்தூர் கோவில் நில எடுப்பு பிரிவு தனி தாசில்தார் சம்பத் ஏலகிரி மலை வருவாய், கோவில் மற்றும் பின் தொடர்பணி தனி தாசில்தராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News