உள்ளூர் செய்திகள் (District)

விபத்தில் பெண் சாவு

Published On 2023-11-03 08:30 GMT   |   Update On 2023-11-03 08:30 GMT
  • அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த பெரியாங்கு ப்பத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி குணவதி (வயது 52) கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் குணவதி மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த குணவதியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குணவதி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து குணவதி உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News