உள்ளூர் செய்திகள் (District)

கார் மீது பைக் மோதி தொழிலாளி சாவு

Published On 2023-06-10 07:47 GMT   |   Update On 2023-06-10 07:47 GMT
  • 3 பேருக்கு தீவிர சிகிச்சை
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

ஜோலார்பேட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே காளி நாயனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் வினோத் குமார் (வயது 19).

அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் வேடி (வயது 25). சாதனா (வயது 32) மற்றும் அன்பு (வயது 25) ஆகிய 3 பேரையும் தனது மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு வாணியம்பாடி பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

நாட்டறம்பள்ளி அருகே தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் முன்னாள் சென்று கொண்டிருந்த கார் டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.

அப்போது பின்னால் வந்த பைக் கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் பயணம் செய்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

அந்த வழியாக சென்ற பொது மக்கள் படுகாயம் அடைந்த வேடி, சந்தோஷ்குமார், சாதனா ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் அன்பு லேசான காயமின்றி உயிர் தப்பினார். மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேடி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் வேடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News