உள்ளூர் செய்திகள் (District)

கோப்புப்படம்

பேக்கரி மாஸ்டரை தாக்கிய வாலிபர் கைது

Published On 2023-11-21 10:01 GMT   |   Update On 2023-11-21 10:01 GMT
  • பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் பாறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 39), பேக்கரி மாஸ்டர்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (38) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு இருந்தது.

இந்த நிலையில் மீண்டும் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த தமிழரசன் அருகில் இருந்த கட்டையை எடுத்து, முருகனை சரமாரியாக தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த முருகன் தற்போது நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, முருகனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News