உள்ளூர் செய்திகள் (District)

திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

Published On 2023-10-22 07:32 GMT   |   Update On 2023-10-22 07:32 GMT
  • 7 வாகனங்கள் பறிமுதல்
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பைக் திருட்டு சம்பந்தமாக போலீசருக்கு புகார்கள் வந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் ஆந்திர மாநிலம் அர்மணிபெண்டா பகுதியை சேர்ந்த திருமலை (வயது 26) என்பவர் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 7 பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News