உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த 2பேர் கைது

Published On 2023-02-05 09:20 GMT   |   Update On 2023-02-05 09:20 GMT
  • கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
  • 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

திருப்பூர் :

திருப்பூா் தொட்டியமண்ணரையை சோ்ந்தவா் காளிதாஸ் (வயது 60). இவா் அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பூா் வடக்கு காவல் துறையினா் நடத்திய சோதனையில் காளிதாஸ் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து 450 கிராம் கஞ்சாவை பறிமுதல்செய்தனா்.

அதே போல திருப்பூா் புதிய பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த பீகாா் மாநிலத்தை சோ்ந்த போசன்குமாா் (25) என்பவரையும் காவல் துறையினா் கைது செய்தனா். இவரிடமிருந்து 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Tags:    

Similar News