உள்ளூர் செய்திகள்

ஒரே நாளில் ரூ.1.49 லட்சத்திற்கு தக்காளி விற்பனை செய்த விவசாயி படம்.

ஒரே நாளில் ரூ.1.49 லட்சத்திற்கு தக்காளி விற்பனை செய்த விவசாயி

Published On 2023-07-31 07:05 GMT   |   Update On 2023-07-31 07:05 GMT
  • ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தக் காளி உள்ளிட்ட காய்கறி களை விற்பனை செய்தனர்.
  • 1 லட்சத்து 49 ஆயிரத்து 500 ரூபாய் வருவாய் கிடைத்தது.

திருப்பூர்:

திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள வடக்கு உழவர் சந்தையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் அதிகளவில் காய்கறிகள் வாங்க வந்தனர். சந்தையில் தக்காளி விலை கிலோ 115 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. இங்கு ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தக் காளி உள்ளிட்ட காய்கறி களை விற்பனை செய்தனர். சேவூர், பெரியகுரும்பபாளையத்தைச் சேர்ந்த விவசாயி திருமூர்த்தி, தோட்டத்தில் விளைந்த, 1,300 கிலோ தக்காளியை விற்பனைக்காக எடுத்து வந்தார். இதை விற்றதன் மூலம் மொத்தம், 1 லட்சத்து 49 ஆயிரத்து 500 ரூபாய் வருவாய் கிடைத்தது. இதுகுறித்து விவசாயி திருமூர்த்தி கூறியதாவது:-

கடந்த சித்திரையில், 1 ஏக்கரில், 5,500 நாற்று தக்காளி நடவு செய்தேன். மூன்று மாதம் மிக கவனத்துடன் பாடுபட்டு, விளைந்த தக்காளியை விற்பனைக்கு கொண்டு சென்றேன். வழக்கமாக தோட்டத்தில் இருந்து வியாபாரிகள் வாங்கி செல்வார்கள். ஆனால் இந்த முறை நானே சந்தைக்கு தக்காளி கொண்டு வந்து விற்பனை செய்தேன். தக்காளி கிலோ, 115 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது, இங்கு வந்த பின் தான் தெரிந்தது.

கடந்த, 20 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். ஆனால் இதுவரை இப்படி ஒரு தொகை கிடைத்ததில்லை. மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Tags:    

Similar News