உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்.



 


திருப்பூர் மாவட்டத்தில் 7 மாதங்களுக்கு பின் கொரோனாவுக்கு முதியவர் பலி

Published On 2022-09-24 07:36 GMT   |   Update On 2022-09-24 07:36 GMT
  • பிப்ரவரி மாதம்19-ந் தேதி ஒருவர் கொரோனா தொற்றுக்கு இறந்துள்ளார்.
  • 82 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு பலியானார்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் கடைசியாக பிப்ரவரி மாதம் 19-ந்தேதி ஒருவர் கொரோனா தொற்றுக்கு இறந்துள்ளார். 7 மாதங்களாக கொரோனா இறப்பு இல்லை. பாதிக்கப்படுவோர் தொற்றில் இருந்து மீண்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த, 20ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த 82 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு பலியானார். இவர் அனுமதியாகும் போதே காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. 95 சதவீதம் பாதிப்பு இருந்ததால், தொற்றில் இருந்து மீண்டு வர முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

Tags:    

Similar News