உள்ளூர் செய்திகள்
- நர்சிங் டிப்ளமோ படித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார்.
- துப்பட்டாவால் யமுனா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள அருள்புரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசு. இவரது மகள் யமுனா ( வயது 19).இவர் நர்சிங் டிப்ளமோ படித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுடிதார் துப்பட்டாவால் யமுனா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.