உள்ளூர் செய்திகள்
கால்நடை மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் தேங்கிய குடிநீர்
மேல்நிலை தொட்டிக்கு வரும் குடிநீர் குழாயில் உள்ள மண் உள்ளிட்ட கழிவுகள் அடித்து வரப்பட்டன.
திருப்பூர்:
திருப்பூர் 15 வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் நான்காவது குடிநீர் திட்டத்திற்காக 7.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
மேல்நிலை தொட்டிக்கு வரும் குடிநீர் குழாயில் உள்ள மண் உள்ளிட்ட கழிவுகள் அடித்து வரப்பட்டன. குடிநீரை வினியோகிக்க முடியாததால் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால் குடிநீர் அருகில் தாழ்வாக உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் தேங்கி உள்ளது.