பல்லடம் பா.ஜ.க. பொதுக்கூட்டம் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
- மாநாட்டு ஏற்பாடுகள் குறித்தும் மைதானம், மேடை அமைப்பு, வாகன ஏற்பாடுகள் போன்றவை குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.
- பா.ஜ.க.மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசுகிறார்.
திருப்பூர் :
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் பல்லடம் அடுத்த கரையான்புதூரில் வருகிற 17 ந்தேதி நடக்கிறது.
பொதுக்கூட்டத்தில் மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசுகிறார்.மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் செந்தில்வேல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளரும் பெருங்கோட்ட பொறுப்பாளருமான முருகானந்தம் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது மாநாட்டு ஏற்பாடுகள் குறித்தும் மாநாட்டு மைதானம், மேடை அமைப்பு, வாகன ஏற்பாடுகள் போன்றவை குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், கவுன்சிலர் காடேஸ்வரா தங்கராஜ், வி. கே. பாலசுப்ரமணியம் , பாலகுமார் , மாவட்ட பொருளாளர் நட்ராஜ் ,துணைத் தலைவர் குணசேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.