உள்ளூர் செய்திகள் (District)
வெள்ளகோவிலில் கார் மோதி 2 பேர் காயம்
- வெள்ளகோவில் நோக்கி வந்த கார் குமரேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது
- வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகேயுள்ள மூலனூர்- கிளாங்குண்டல் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (வயது 29) ,அவரது உறவினர் விவேக பிரியன் ( 17) ஆகிய இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் வெள்ளகோவில் -கரூர் ரோட்டில் புஷ்பகிரி நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கரூரிலிருந்து வெள்ளகோவில் நோக்கி வந்த கார் குமரேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குமரேசன் மற்றும் பின்னால் அமர்ந்து வந்த விவேகப்பிரியன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.