உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம். 

செஸ் ஒலிம்பியாட் - செல்பி பாய்ண்ட்

Published On 2022-07-20 05:42 GMT   |   Update On 2022-07-20 05:42 GMT
  • பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
  • மாநகராட்சி அலுவலர்கள், லோகோ முன்பாக நின்று போட்டோ எடுத்து மகிழ்கின்றனர்.

திருப்பூர்:

உலக செஸ் ஒலிம்பியாட் -2022 போட்டி 28 ந் தேதி துவங்கி, ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. போட்டி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.அதன் ஒரு பகுதியா செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது. மனு கொடுக்க வந்த இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், செல்பி ஸ்பாட்டில் நின்று செல்பி எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து மகிழ்ந்தனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அலுவலகம் முன் பெரிய அளவிலான 'லோகோ' வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், மாநகராட்சி அலுவலர்கள், லோகோ முன்பாக நின்று போட்டோ எடுத்து மகிழ்கின்றனர்.

Tags:    

Similar News