உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம். 

பல்லடம் அருகே மது, புகையிலை விற்பனை செய்த 4 பேர் கைது

Published On 2022-10-08 08:13 GMT   |   Update On 2022-10-08 08:13 GMT
  • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
  • அவரிடமிருந்து 6 மதுபான பாட்டில்களும் ரூ.200 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பல்லடம்:

காமநாயக்கன்பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட எம்.ஊத்துக்குளி பகுதியில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த, அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் முருகன் (27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 மதுபான பாட்டில்களும் ரூ.200 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல புளியம்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த பெட்டிக்கடைக்காரர்கள், முத்துக்குமாரசாமி (50) காமராஜ் (52) மணிகண்டன் (26) ஆகியோரிடமிருந்து 17 பொட்டலம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News