உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்

திருப்பூரில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி சாவு

Published On 2023-07-19 10:02 GMT   |   Update On 2023-07-19 10:02 GMT
  • தூக்க கலக்கத்தில் இருந்த அவர் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
  • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பூர்:

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பங்கஜ் மராண்டி(45). இவர் ஊட்டியில் உள்ள எஸ்டேட்டில் தனது குடும்பத்தினருடன் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ஊட்டியில் வாடகைக்கு வீடு ஒன்றை பிடித்து தங்கி இருந்தார்.

இதனையடுத்து தனது குடும்பத்தினரை அழைத்து வருவதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு நேற்று ரயில் மூலம் கோவை வந்தார். அதிகாலை 4 மணி அளவில் ரயில் திருப்பூர் அடுத்த கூலிபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது பாத்ரூம் செல்வதற்காக பங்கஜ் மராண்டி வந்துள்ளார்.

அப்போது தூக்க கலக்கத்தில் இருந்த அவர் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.நீண்ட நேரமாகியும் அவர் இருக்கைக்கு திரும்பாததால் மனைவி மற்றும் குழந்தைகள் ரயில் முழுவதும் தேடிப் பார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை கோவை வந்ததும் கோவை ரயில்வே போலீசில் தகவல் தெரிவித்தனர். ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் திருப்பூர் அருகே கூலிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் ஒருவர் பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டபோது அது பங்கஜ் மராண்டி என்பது தெரியவந்தது.பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது சம்பந்தமாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News