உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்.

திருப்பூர் வழியாக சென்னை-எர்ணாகுளத்துக்கு ஓணம் சிறப்பு ரயில் இயக்கம்

Published On 2023-08-08 04:12 GMT   |   Update On 2023-08-08 04:12 GMT
  • தாம்பரம் - எர்ணாகுளம் வருகிற 24-ந்தேதி முதல் செப்டம்பர் 9ந்தேதி வரை வியாழன் தோறும் இயக்கப்படும்.
  • ஆகஸ்டு 25-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை இந்த ெரயில் இயங்கும்.

திருப்பூர்:

ஓணம் பண்டிகையையொட்டி தாம்பரம் - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில் (எண்:06053) வருகிற 24-ந்தேதி முதல் செப்டம்பர் 9ந்தேதி வரை வியாழன் தோறும் இயக்கப்படும். மதியம் 3 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் ரெயில் மறுநாள் காலை 3:30மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.

எர்ணாகுளத்தில் புறப்படும் ெரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். மறுமார்க்கமாக எர்ணாகுளம் - தாம்பரம் ரெயில் (எண்: 06504) வெள்ளிதோறும் காலை 8:30மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 11:15மணிக்கு தாம்பரம் சென்று சேரும். ஆகஸ்டு 25-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை இந்தரெயில் இயங்கும்.

இந்த ரெயில்களில் ஒரு முதல் வகுப்பு ஏ.சி., 2 இரண்டாம் வகுப்பு ஏ.சி., தலா 6 ஏ.சி., மற்றும் படுக்கை வசதி, 2 பொது பெட்டிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News