உள்ளூர் செய்திகள் (District)

மயில் உருவம் கொணட் தக்காளி பழத்தை படத்தில் காணலாம்.

தக்காளி பழத்தில் மயில் உருவம்-விவசாயிகள் வியப்பு

Published On 2022-08-18 08:13 GMT   |   Update On 2022-08-18 08:13 GMT
  • தக்காளி பறிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
  • தக்காளிகளில் நோய், மற்றும் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால், இது போன்ற அடையாளங்கள் காணப்படும்.

பல்லடம் :

பல்லடம் கரைப்புதுார் கிராமத்தை சேர்ந்தவர் சேகர், விவசாயி. இவர் தனது விளை நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். தக்காளி பறிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது தக்காளி ஒன்றில் மயில் போன்ற உருவம் இருந்தது.

இது விவசாயியை வியப்பில் ஆழ்த்தியது.இது குறித்து சேகர் கூறுகையில், வழக்கமாக, தக்காளிகளில் நோய், மற்றும் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால், இது போன்ற அடையாளங்கள் காணப்படும். ஆனால் எனது விளை நிலத்தில் அது போன்ற பாதிப்புகள் இல்லாததால், தக்காளிகள் அனைத்தும் நன்றாகவே உள்ளன.இருப்பினும் பழங்கள் பறிக்கும் போது ஒரு தக்காளி மட்டும் வித்தியாசமாக இருந்தது. அதில் மயில் போன்ற உருவம் தென்பட்டது. தக்காளி பழத்தில் இது போன்று இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது என்றார்.

Tags:    

Similar News