உள்ளூர் செய்திகள்

பஸ் வசதி கேட்டு மனு கொடுக்க வந்த கிராம மக்களின் காட்சி.

கிராமங்களுக்கு பஸ் வசதி கேட்டு மனு

Published On 2023-07-03 11:07 GMT   |   Update On 2023-07-03 11:07 GMT
  • கிராம மக்கள் பலமுறைபோக்குவரத்துறையினரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
  • மாவட்டத்தில் பஸ் வசதி இல்லாத கிராமங்களை கண்டறிந்து நடவடிக்கை உரிய எடுக்க வேண்டும்.

திருப்பூர்:

இந்திய மாதர் தேசிய சம்மேளம் திருப்பூர் புறநகர் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம் பல்லடம், ஆறுமுத்தாம்பளையம் ஊராட்சியில் அறிவொளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு உரிய பஸ் வசதியில்லை .இது குறித்து போக்குவரத்துறையினரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

ஆகவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பஸ் வசதி செய்து தர வேண்டும். அதே போன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமப்புற பகுதிகளில் பஸ் வசதி இல்லை. அதனால் நகரப் பகுதிகளுக்கு அன்றாடப் பணிகளுக்கும், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு வர முடியாமல் மக்கள் பாதிப்பு அடைகின்றனர்.

மாவட்டத்தில் பஸ் வசதி இல்லாத கிராமங்களை கண்டறிந்து நடவடிக்கை உரிய எடுக்க வேண்டும். அவினாசி தாலுகாவில் உள்ள கானூர் ஊராட்சியில், சின்ன கானூர், பெரிய கானூர் பகுதியில் இயங்கும் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்து செல்வது இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் அவதி அடைகின்றனர். அதனை முறைப்படுத்தி நேரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்.

ஊத்துக்குளி ஏ. பெரியபாளையம் ஊராட்சியில் உள்ள நல்லக்கட்டிப்பாளையம் பகுதியில் சரியான முறையில் பஸ் இயக்கப்படாத காரணத்தால் அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக அவதிப்பட்டு வருகின்றனர். அதனை சரி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News