உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்.

அருள்புரத்தில் நாளை மின்தடை

Published On 2022-07-29 06:37 GMT   |   Update On 2022-07-29 06:37 GMT
  • அருள்புரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் தடை

திருப்பூர் :

திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அருள்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அருள்புரம், தண்ணீர்பந்தல், உப்பிலிபாளையம், அண்ணாநகர், செந்தூரான் காலனி, லட்சுமிநகர், குங்குமப்பாளையம், கவுண்டம்பாளையம், கணபதிபாளையம், சென்னிமலைபாளையம், பாச்சாங்காட்டுபாளையம், குன்னாங்கால்பாளையம், மலையம்பாளையம், திருமலைநகர், அய்யாவுநகர், நொச்சிபாளையம், நொச்சிபாளையம் வாய்க்கால்மேடு, சிந்து கார்டன், சரஸ்வதி நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News