உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கவிடக்கூடாது - மருத்துவ அலுவலர் வேண்டுகோள்

Published On 2022-12-07 05:00 GMT   |   Update On 2022-12-07 05:00 GMT
  • பெரியவர்கள் முதல் சிறியவர் வரை காது மற்றும் மூக்கு பகுதிகளில் ஈரக்காற்று படாதபடி பாதுகாப்பாக இருக்கவேண்டும்.
  • முகக்கவசம் அணியாவிட்டால் மற்றவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையஆரம்ப சுகாதார நிலையஆரம்ப சுகாதார நிலையமருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தற்போது அடிக்கடி மழை பெய்து வருகிறது. பனிபொலிவும் உள்ளது. எனவே பெரியவர்கள் முதல் சிறியவர் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும், காது மற்றும் மூக்கு பகுதிகளில் ஈரக்காற்று படாதபடி பாதுகாப்பாக இருக்கவேண்டும். வீட்டை சுற்றி மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்கும் போது கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வீட்டில் குடிநீரை பாதுகாப்பாக மூடிவைக்க வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். சளி மற்றும் காய்ச்சல் இருந்தால் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து கொண்டு உடனே மருத்துவரை அணுகவும், முகக்கவசம் அணியாவிட்டால் மற்றவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News