உள்ளூர் செய்திகள் (District)

 யோகாசன பயிற்சி நடைபெற்ற காட்சி.

உடுமலையில் கல்லூரி மாணவிகளுக்கு யோகாசன பயிற்சி

Published On 2022-08-26 08:50 GMT   |   Update On 2022-08-26 08:50 GMT
  • காயகல்ப பயிற்சி, எளிய உடற்பயிற்சிகள் மாணவிகளுக்கு கற்பிக்கப்பட்டன.
  • கல்பம் மற்றும் யோகாசன பயிற்சிகளால் மனது ஒருநிலைப்படும்.

உடுமலை :

உடுமலை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை மற்றும் அரசு கலைக்கல்லூரி இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு யோகாசன பயிற்சிகளை நடத்தினர். இதில் காயகல்ப பயிற்சி ,எளிய உடற்பயிற்சிகள் மாணவிகளுக்கு கற்பிக்கப்பட்டன. உடுமலை மனவளக்கலை அறக்கட்டளை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்கள் பயிற்சியை நடத்தினர். கல்பம் மற்றும் யோகாசன பயிற்சிகளால் மனது ஒருநிலைப்படும் .படிக்கும் மாணவிகள் மனநிலை ஒருமைப்படுவதற்கு இந்த யோகாசனம் மற்றும் காயகல்ப பயிற்சிகள் உதவும் என பயிற்சி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

4 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில் கல்லூரி மாணவ மாணவிகள்ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் படிக்கும் மாணவர்கள் அதன் பலனை உணர முடியும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News