உள்ளூர் செய்திகள் (District)

திருவள்ளூர் அருகே குடோனில் செல்போன் திருடிய ஊழியர் கைது

Published On 2023-05-12 06:29 GMT   |   Update On 2023-05-12 06:29 GMT
  • போளிவாக்கம் பகுதியில் செல்போன் உள்ளிட்ட பொருட்களை சேமித்து வைத்து விற்பனைக்கு அனுப்பும் தனியார் நிறுவனத்தின் குடோன் உள்ளது.
  • போலீசார் ஹரிசை கைது செய்தனர். மேலும் அவரது நண்பரை தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியில் செல்போன் உள்ளிட்ட பொருட்களை சேமித்து வைத்து விற்பனைக்கு அனுப்பும் தனியார் நிறுவனத்தின் குடோன் உள்ளது.

இதில் அடிக்கடி விலை உயர்ந்த செல்போன்கள் திருடு போனது. இதையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது குடோனில் ஊழியராக வேலை பார்த்து வரும் ஏகாட்டூர் அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் மற்றும் அவரது நண்பர் ஒருவரம் குடோனில் கணக்கெடுப்பது போல் நடித்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம்மதிப்புள்ள செல்போன்களை திருட தங்களது ஆடைக்குள் மறைத்து வைத்து செல்வது தெரிந்தது.

இது குறித்து மணவாளநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஹரிசை கைது செய்தனர். மேலும் அவரது நண்பரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News