உள்ளூர் செய்திகள்

பஸ் மோதி முதியவர் பலி

Published On 2022-11-13 08:55 GMT   |   Update On 2022-11-13 08:55 GMT
  • போளூர் பஸ் நிலையத்தில் பரிதாபம்
  • போலீசார் விசாரணை

போளூர்:

போளூர் பஸ் நிலையத்தில் நேற்று மதியம் 2 மணி அளவில் குன்னத்தூர் காலனியை சேர்ந்தவர் ராஜி (வயது 55) ஊருக்கு செல்வதற்கு நுழைவாயில் அருகே காத்திருந்தார்.

அப்போது திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் அரசு பஸ் நிலையத்தில் இருந்து வெளியே திரும்பும் போது முதியவர் மீது மோதியது.

இதில் ராஜி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இவருக்கு மணியம்மாள் என்ற மனைவியும் 5 மகன்களும் உள்ளனர். அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News