உள்ளூர் செய்திகள் (District)

போளூரில் நடந்த பா.ம.க.வின் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வேலாயுதம் பேசிய போது எடுத்த படம்.

பா.ம.க. வடக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

Published On 2023-04-23 06:23 GMT   |   Update On 2023-04-23 06:23 GMT
  • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

போளூர்:

போளூர் அருகே கேளூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார், ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார், மாவட்ட செயலாளர் வேலாயுதம் அனைவரையும் வரவேற்றார்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு குறித்து தமிழக முதல்வருக்கு வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் ஒரு லட்சம் கடிதம் அனுப்புவது.

அனைத்து கடைகளின் பெயர் பலகை தமிழில் வைக்கக் அன்போடு கோருதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் போளூர் நகர செயளாலர் கே.சி. குமரன், ஒன்றிய செயலாளர் துரை ராஜ், விஜயன், பாபு, தினேஷ், பரத், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News