உள்ளூர் செய்திகள்

வந்தவாசியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-05-15 09:30 GMT   |   Update On 2023-05-15 09:30 GMT
  • காலை 9 மணி முதல் 5 மணி வரை தடை செய்யப்படும்
  • செயற்பொறியாளர் அறிவிப்பு

வந்தவாசி,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி துணை மின் நிலையத்தில் நாளை 16-ந்் தேதி பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வந்தவாசி, கீழ் கொடுங்காலூர், தெள்ளார், புரிசை, மாம்பட்டு, நல்லூர் மற்றும் சத்தியவாடி ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று வந்தவாசி மின் உற்பத்தி செயற்பொறியாளர் மீனாகுமாரி அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News