உள்ளூர் செய்திகள்
- நாய் குறுக்கே வந்ததால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள மேல்மட்டை விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 55), இவர் மாட்டு தரகு வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் செய்யாருக்கு பைக்கில் வந்தார். தாண்டுக்குளம் கிராமம், அட்டை கம்பெனி அருகில் வந்து கொண்டிருந்த போது திடீரென நாய்குறுக்கே பாய்ந்தது.
நாய் மீது ஏற்றாமல் இருக்க பிரேக் போட்டு நிலை தடுமாறி கீழே விழுந்ததில், ஆனந்தனுக்கு தலை மற்றும் உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக செய்யாறு அரசு பொது மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.
இது சம்பந்தமாக செய்யாறு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.