உள்ளூர் செய்திகள் (District)

கோப்புப்படம்

போளூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா

Published On 2022-06-13 09:52 GMT   |   Update On 2022-06-13 09:52 GMT
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
  • கேக் வெட்டி கொண்டாட்டம்

போளூர்:

போளூரில் நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. போளூர் நற் குன்று ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் நேற்று காலையில் முருகனுக்கு பாலபிஷேகம் செய்து கால பூஜை நடைபெற்றது.பின்பு மாலை 6 மணியளவில் முருகனுக்கு பக்தர்கள் 2 கிலோ கேக் வெட்டி முருகனின் பிறந்தநாளான நேற்று வைகாசி விசாகத்தை சிறப்பாக கொண்டாடினர்.

அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு முருகன் கோவிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. போளூர் கைலாசநாதர் கோயில், மாம்பட்டு, பெரணம்பாக்கம், வசூர் போன்ற இடங்களில் உள்ள சிவன் கோவில்கள் பிரதோஷங்கள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News