உள்ளூர் செய்திகள்

நெசவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Published On 2022-06-27 10:03 GMT   |   Update On 2022-06-27 10:03 GMT
  • தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
  • போலீசார் விசாரணை

செய்யாறு:

செய்யாறு டவுன் திருவத்தூர் கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 56), நெசவு தொழிலாளி ஒரு வருடத்திற்கு முன்பு கொரானாவால் பாதிக்கப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். மேலும் பட்டு நெசவு தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான மனோகரன் குடிப்பழக்கத்திற்கு ஆளானார்.

இந்நிலையில் நேற்று காலை நெசவு கூடத்தில் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனை சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் மனோகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து இறந்தவரின் மகன் சிவகுமார் செய்யார் போலீசில் நேற்று புகார் செய்தார்.போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News