உள்ளூர் செய்திகள்

சேரன்மகாதேவி பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

Published On 2022-12-15 09:46 GMT   |   Update On 2022-12-15 09:46 GMT
  • கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட மேலக்கல்லூர் துணை மின்நிலைத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

கல்லிடைக்குறிச்சி:

கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட மேலக்கல்லூர் துணை மின்நிலைத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மேலக்கல்லூர், சேரன்மகாதேவி,சுத்தமல்லி,சங்கன்திரடு, கொண்டாநகரம்,நடுக்கல்லூர், பழவூர்,கருங்காடு,திருப்பணிகரிசல்குளம்,துலக்கர்குளம்,வெள்ளாங்குளம் ,உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News