உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கிய லாரி.

தொப்பூர் கணவாய் பகுதியில் லாரி விபத்தில் 2 டிரைவர்கள் படுகாயம்

Published On 2022-10-02 09:36 GMT   |   Update On 2022-10-02 09:36 GMT
  • லாரி ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
  • இதில் ஓட்டுனர் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

தருமபுரி,

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு லாரியில் பழைய பேப்பர் பாரம் ஏற்றி கொண்டு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இருளப்பன் (வயது 22) மற்றும் மாற்று ஓட்டுநர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிசாமி (34) ஆகிய இருவரும் நேற்று இரவு சுமார் 1 மணிக்கு தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோவிலை அடுத்த இரண்டாவது வளைவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஓட்டுனர் இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் படுகாயம் அடைந்த ஓட்டுநர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News