உள்ளூர் செய்திகள்

சிவகிரியில் மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2023-03-05 08:46 GMT   |   Update On 2023-03-05 08:46 GMT
  • உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு சிவகிரி ராஜ் நியூ நர்சரி பிரைமரி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
  • மரக்கன்றுகளின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சிவகிரி:

உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு சிவகிரி ராஜ் நியூ நர்சரி பிரைமரி பள்ளி வளாகத்தில் சிவகிரி வனச்சரக அலுவலர் மவுனிகா, வனவர்கள் அசோக்குமார், அஜித்குமார் ஆகியோர் மரக்கன்று களை நட்டனர். மேலும் மரக்கன்றுகளை நடுவதன் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். நிகழ்ச்சியில் வனப்பணியாளர்கள், பள்ளியின் முதல்வர் ராமர், துணை முதல்வர் ராஜம்மாள், ஆசிரி யர்கள், மாணவ - மாண விகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News