உள்ளூர் செய்திகள் (District)

டாஸ்மாக் மதுபான கடை அருகே கள்ளசந்தையில் மது விற்பனை படுஜோர்

Published On 2023-04-26 07:05 GMT   |   Update On 2023-04-26 07:05 GMT
  • 188 மது பாட்டில்கள் பறிமுதல்
  • விற்பனையில் ஈடுபட்டவர் கைது

திருச்சி,

திருச்சி சிறுகனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெருவளூர் டாஸ்மாக் மது பான கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதை அறிந்து, அங்கு மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த சிறுகனூர் மேற்கு தெருவை சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 56) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 188 மது பாட்டில்கள், 6 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News