உள்ளூர் செய்திகள் (District)

மது குடித்த 2 பேர் சாவு

Published On 2023-01-25 08:32 GMT   |   Update On 2023-01-25 08:32 GMT
  • டாஸ்மாக் அருகே பரபரப்பு
  • போலீசார் விசாரணை

திருச்சி, 

திருச்சி காட்டூர் பாத்திமா புரத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 56). இவர் சில நாட்களாக தனது குடும்பத்தை விட்டு தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதிக அளவு மது குடித்துவிட்டு திருச்சி பாலக்கரை பகுதி மணல்வாரித்துறை ரோடு டாஸ்மார்க் கடை அருகே மதுபோதையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்து பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மகன் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல திருச்சி உறையூர் பாளையம் பஜாரை சேர்ந்தவர் அப்துல் கிட்டு. இவரது மகன் ஜாகிர் உசேன்(39). இவர் திருச்சி மெயின் காட் பகுதியில் உள்ள டெக்ஸ்டைலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் வீட்டை விட்டு வெளியே சென்று மது அதிகமாக குடித்து கோணகரை டாஸ்மார்க் அருகே இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அவரது மனைவி நிஷா அளித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News