உள்ளூர் செய்திகள் (District)

திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி விற்ற 6 பேர் கைது

Published On 2023-05-06 08:50 GMT   |   Update On 2023-05-06 08:50 GMT
  • திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி விற்ற 6 பேர் கைது செய்யபட்டனர்
  • போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி:

ஸ்ரீரங்கம், பாலக்கரை பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது கஞ்சா விற்றதாக திருவானைக்காவல் சேர்ந்த சூரியகுமார், பாலக்கரையைச் சேர்ந்த முரளி ஆகிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் ஸ்ரீரங்கம், பாலக்கரை, தில்லை நகர் ஆகிய பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக ஜெகன், ஆரோக்கியம், பிரபாகரன், இப்ராம்ஷா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரத்து 750 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News