உள்ளூர் செய்திகள் (District)

6 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

Published On 2023-03-27 08:51 GMT   |   Update On 2023-03-27 08:51 GMT
  • மணப்பாறை அருகே வீட்டில் தூங்கிய அக்காள்-தங்கையிடம் நள்ளிரவில் கைவரிசை
  • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப் பாறையை அடுத்த வடுக–பட்டி கிராமம் ராஜாத்தி அம்மன் கோவில் பின் பகுதியில் வசித்து வருப–வர்கள் பாலாமணி (வயது 54), பத்மா (47). இவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரிகள் ஆவார்கள். அவர்களுடன் பாலா–மணி–யின் மகன் ரமணி கிருஷ் ணன் (35) என்பவரும் உள் ளார்இந்தநிலையில் நேற்று இரவு ரமணி கிருஷ்ணன் ஒரு அறையில் படுத்து தூங் கினார். சகோதரிகளான பாலாமணி, பத்மா இருவ–ரும் மற்றொரு அறை–யில் படுத்திருந்தனர். வீட்டை பூட்டி தூங்கிக் கொண்டி–ருந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் இருவர் வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்தனர்.இந்த திடீர் சத்தம் கேட்டு சகோதரிகள் எழுந்து பார்த்தனர். கண்ணி–மைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர்கள் பாலாமணி மற்றும் அவரது தங்கை பத்மா ஆகியோரின் கழுத் தில் கிடந்த தலா 3 பவுன் தங்க சங்கிலி வீதம் 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.இதையடுத்து அவர் கள் நள்ளிரவில் சத்தம் போடவே அக்கம் பக்கத் தில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது மர்ம நபர்கள் 2 பேர் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்து மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து இரண்டு பெண்களிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News