உள்ளூர் செய்திகள் (District)

திருச்சி முக்கொம்பு காவிரியில் மூழ்கி 6 வயது சிறுமி பலி

Published On 2023-04-24 09:50 GMT   |   Update On 2023-04-24 09:50 GMT
  • குடும்பத்தினருடன் விடுமுறை சுற்றுலா சென்றபோது பரிதாபம்
  • வாத்தலை போலீசார் விசாரணை

மண்ணச்சநல்லூர்,

திருச்சி அரியமங்கலம் அருகே உள்ள தெற்கு உக்கடை பகுதியை சேர்ந்த சதாம் உசேன் மகள் ரிஸானா தஸ்ரின் (வயது 6), நேற்று விடுமுறை என்பதால் சதாம் உசேன் தனது குடும்பத்துடன் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது காவிரி ஆற்றின் நடுவில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் குடும்பத்தினருடன் குழந்தை ரிஸானா தஷ்ரின் குளித்து கொண்டிருந்துள்ளது. குடும்பத்தினர் அனைவரும் உற்சாகமாய் குளித்து கொண்டிருக்கும் வேளையில் திடீர் என்று ரிஸானா தஸ்ரினை காணவில்லை. பதறிப்போன சதாம் உசேன் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் தேடி பார்த்தபோது ரிஸானா தஸ்ரின் தண்ணீர் மூழ்கியது தெரியவந்தது. அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News