உள்ளூர் செய்திகள்

பஸ் ஏற முயன்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி திருட்டு

Published On 2023-04-19 09:18 GMT   |   Update On 2023-04-19 09:18 GMT
  • பஸ் ஏற முயன்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி திருட்டு போனது
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

துறையூர்:

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விஸ்வாம்பாள் சமுத்திரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்க பொண்ணு (வயது 60). இவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் பஸ்சில் துறையூர் வந்தார். பின்னர் அவர் பி.மேட்டூர் செல்ல அரசு டவுன் பஸ்சில் ஏற முயன்றார். பஸ்சில் ஏறிய பின்னர் தற்செயலாக தனது கழுத்தை பார்த்தபோது, 7 பவுன் தங்க சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சக பயணிகளிடம் விசாரித்தும் தங்க சங்கிலி கிடைக்கவில்லை.

இதனையடுத்து பஸ்சை துறையூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரிக்க பயணிகள் வலியுறுத்தினர்.பின்னர் பஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஒவ்வொரு பயணியிடம் விசாரித்தும் நகை கிடைக்கவில்லை. இது தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.


Tags:    

Similar News