உள்ளூர் செய்திகள் (District)

போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்-முசிறி இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை

Published On 2023-01-16 08:26 GMT   |   Update On 2023-01-16 08:26 GMT
  • போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முசிறி இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
  • வியாபாரிகள் போக்குவரத்து இடையூறு இல்லாத வகையில் பார்த்துக்கொள்வதாக உறுதி அளித்தனர்.

முசிறி:

வியாபாரிகளுடனான போலீசார் கலந்தா லோசனை கூட்டம் முசிறியில் நடைபெற்றது. முசிறி இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் போக்குவரத்து நெரிசல் தீர்வுக்கான கலந்தாலோசனை நடத்தப்பட்டது. அப்போது, துறையூர் ரோட்டில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களின் முன்பு போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். வணிக நிறுவனத்தை சார்ந்தவர்களை கொண்டு பார்க்கிங் செய்யப்படுவதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் அறிவுறுத்திய தோடு, போக்குவரத்துநெரிசல் ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து வியாபாரிகள் போக்குவரத்து இடையூறு இல்லாத வகையில் பார்த்துக்கொள்வதாக உறுதி அளித்தனர்.

Tags:    

Similar News