உள்ளூர் செய்திகள்

நடுவானில் விமான பயணி மரணம்

Published On 2023-04-15 08:10 GMT   |   Update On 2023-04-15 08:10 GMT
  • சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிக்கு நடுவானில் மாரடைப்பு
  • உயிரிழந்த நிலையில் திருச்சி விமான நிலையம் வந்த பயணி உடல்

கேகே நகர்

திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளான மலேசியா சிங்கப்பூர் மஸ்கட் ஓமன் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது அதில் குறிப்பாக சிங்கப்பூர் மலேசியா துபாய் சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இந்த விமானங்களை ஸ்கூட் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இண்டிகோ மலிண்டோ ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்த உடன் விமானத்தில் இருந்த பயணிகள் இறங்குவதற்கு முற்பட்டபோது இந்த விமானத்தில் பயணம் செய்த விருதுநகரை சேர்ந்த பரமசிவம் முனியசாமி 36 சேர்ந்தஎன்ற பயணி நான் இருக்கையில் இருந்து வெளியில் வராத காரணத்தினால் சந்தேகம் அடைந்த விமான பணியாளர்கள் உடனடியாக விமான நிலையத்திலிருந்து மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து மருத்துவ குழுவினர் விமானத்திற்குள் சென்று அவரை சோதனை செய்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து அவரது உடலை விமானத்தில் இருந்து இறக்கி அவரது மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News