உள்ளூர் செய்திகள்

முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி

Published On 2023-04-23 07:59 GMT   |   Update On 2023-04-23 07:59 GMT
  • திருச்சியில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற தலைப்பில் கண்காட்சி
  • நடிகர் திலகம் பிரபு திறந்து வைத்தார்

திருச்சி.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்கிற தலைப்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வதுபிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்த கண்காட்சியை தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு ஏற்பாடு செய்யதிருந்தார். இந்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் திரைப்பட நடிகர் பிரபு திறந்து வைத்து பார்வையிட்டார்.நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., வைரமணி, எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன், அப்துல் சமது, முன்னாள் எம்.எல்ஏ. அன்பில் பெரியசாமி, மாநகரச் செயலாளர்கள் மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், மண்டலக்குழுத் தலைவர் மதிவாணன், துணை மேயர் திவ்யா, மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன், சேர்மன் துரைராஜ்,மண்டலக்குழுத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, ஜெயநிர்மலா, தில்லைநகர் கண்ணன், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், இளங்கோ, நாகராஜன், கமால் முஸ்தபா, ராம்குமார், சிவா, ராஜ் முகம்மது, அ.த.த. செங்குட்டுவன், லீலா வேலு, ஸ்ரீரங்கம் ஜெயக்குமார், கருணாநிதி, கவுன்சிலர்கள் காஜாமலை விஜய், கலைச்செல்வி, ராமதாஸ், மஞ்சுளா பாலசுப்பிரமணியன், செல்வி மணி, கே.கே.கே.கார்த்திக் பந்தல் ராமு, ஆர்.சி.ராஜா, அந்தோணிசாமி, துறையூர் ஒன்றியத்திலிருந்து நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.பின்னர் நடிகர் பிரபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-நான் சிறுவயது முதல் தளபதி மு.க.ஸ்டாலினோடு பழகி வருகிறேன். அவருடைய கடின உழைப்பு என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும். படிப்படியாக உயர்ந்து இன்று முதல்வர் என்ற இந்த இடத்திற்கு வந்துள்ளார். இந்த புகைப்பட கண்காட்சியில் அவர் கழகத்திற்காக செய்த பணியும், அதனால் அவர் இளைஞர் அணி தலைவராகவும், மேயராகவும், இன்று முதல்வராகவும் உயர்ந்துள்ளார். அதேபோல் அவர் மக்களுக்காக எவ்வளவு பணி மற்றும் தியாகங்களை செய்துள்ளார். இந்த கண்காட்சியே அதற்கு சான்றாக உள்ளது.திருச்சி என்பது நம்ம ஊரு என எங்க அய்யா, அன்பில் தர்மலிங்கம் இவர்களோடு நான் இங்கு வாழ்ந்திருக்கிறேன், வளர்ந்திருக்கிறேன். திருச்சியில் இருக்கக்கூடிய இடங்கள், அநேக தெருக்கள் பரிச்சயமானது. எனக்கு மாட்டு வண்டியில் ஊரை சுற்றிய பகுதிகள்தான் ஞாபகம் வருகிறது.இதுமட்டுமின்றி எனக்கு இந்த ஊரில் நிறைய உறவினர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள். எங்க ஐயா சொல்வது உறவினர்கள் எவ்வளவு முக்கியமோ, அதற்கு இணையாக நண்பர்களும் முக்கியம் என்று கூறுவார். எங்கள் அண்ணன் மு.க.ஸ்டாலின் இன்று எப்படி தமிழக மக்களுக்கு பல நன்மைகளை தொடர்ந்து செய்து வருகிறாரோ, அதேபோல் இனிவரும் கூடிய காலங்களிலும் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.அவருடைய உடல் நலம் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று எங்களுடைய ஐயாவிடமும், டாக்டர் கலைஞரிடமும் வேண்டிக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.பாலக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ஒரு சிலை திறப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், எங்கள் அண்ணன் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் இருக்கிறார்கள். அந்த சிலை திறப்பதில் ஒரு சில அடிப்படை பிரச்சினைகள் இருப்பதால் விரைவில் அவர்கள் அதை திறந்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

Tags:    

Similar News