உள்ளூர் செய்திகள் (District)
திருச்சி மத்திய சிறைவாசிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் புத்தகங்கள்
- டி.ஐ.ஜி. ஜெயபாரதியிடம் வழங்கப்பட்டது
- சாக்சீடு, புனித அன்னாள் பள்ளி இணைந்து வழங்கியது
திருச்சி,
திருச்சி, சாக்ஷீடு மற்றும் திருச்சி அன்னாள் மேல்நிலைப்பள்ளி இணைந்து ரூ.50,000 மதிப் புள்ள புத்தகங்களை சிறைவாசிகளின் நூலகத்திற்கு வழங்கினார்.திருச்சி மத்திய சிறையில் நடைபெற்ற இந்த விழாவில் திருச்சி சரக சிறைகள் மற் றும் சீர்திருத்தப்பணிகள் துறை துணைத் தலைவர் ஜெயபாரதியிடம் புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் பங்குத்தந்தை அன்புராஜ், சிறைக் கண்காணிப்பாளர் ஆண்டாள், சிறை மேலாளர் திருமுருகன், சின்னராணி, தலைைம ஆசிரியை மரிய ரஞ்சிதலீலா ஆகியோர் கலந்துகொண்டனர்.