உள்ளூர் செய்திகள்

பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா

Published On 2022-12-21 08:38 GMT   |   Update On 2022-12-21 08:38 GMT
  • பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது
  • மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

திருச்சி:

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெங்கன்குடியில் பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு கல்லூரியின் வளாகத்தில் பேவர் பிளாக் பாதை அமைக்கப்பட்டு அதை கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி புனிதம் செய்தார்கள்.இதையடுத்து கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சிக்கு ஆயர் தலைமை தாங்கி கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்து செய்தியை வழங்கினார். விழாவிற்கு கும்பகோணம் மறை மாவட்ட பொருளாளர் பி. சிங்கராயர், லால்குடி மறைவட்ட முதன்மை குரு ஆர்.பீட்டர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்தினர்.மேலும் இவ்விழாவிற்கு பல்வேறு அருட்பணியார்கள், அருட் சகோதரிகள், விருந்தினர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளர் முனைவர் எஸ்ஜான் கென்னடி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி கல்லூரியில் பயிலும் பயிற்சி ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமிக்கு, கல்லூரி முதல்வரும், தாளாளருமான முனைவர் ஜான் கென்னடி சால்வை அணிவித்து வரவேற்றார். அருகில் மறைமாவட்ட பொருளாளர் சிங்கராயர், லால்குடி மறைமாவட்ட அதிபர் பீட்டர் ஆரோக்கியராஜ் உள்ளனர்.


Tags:    

Similar News