உள்ளூர் செய்திகள்

திருச்சி அளுந்தூரில் ஜல்லிக்கட்டு-களமாடிய காளைகளுடன் மல்லுக்கட்டிய மாடுபிடி வீரர்கள்

Published On 2023-02-19 09:19 GMT   |   Update On 2023-02-19 09:19 GMT
  • திருச்சி அளுந்தூரில் ஜல்லிக்கட்டில் களமாடிய காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர்
  • இதில் 600 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 207 மாடு–பிடி வீரர்கள் கலந்து கொண்ட–னர்.

ராம்ஜிநகர்:

திருச்சியை அடுத்த மணி–கண்டம் அருகே உள்ள அளுந்தூர் கிராமத்தில் தானா முளைத்த மாரியம் மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று அரசு அனுமதியுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சேலம், சிவ–கங்கை ஆகிய மாவட் டங் களில் இருந்து சுமார் 600 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 207 மாடு–பிடி வீரர்கள் கலந்து கொண்ட–னர். போட்டியை ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பழனி–யாண்டி தொடங்கி வைத்தார். இதில் பிடிபடாமல் களத்தில் நின்று விளையா–டிய மாடுகளுக்கும், மாடு–களை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசு, வெள்ளி காசு கட்டில், குளிர் சாதன பெட்டி, எல்இடி டி.வி., பீரோ உள்ளிட்ட பல பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த மாடுபிடி வீரருக்கும் சிறந்த ஜல்லிக்கட்டு காளைக் கும் சிறப்பு பரிசுகள் வழங் கப்பட்டது. இப்போட்டியில் 3 மாடு–பிடி வீரர்கள், 3 பார்வை–யாளர்கள், 2 மாட்டின் உரிமையாளர்கள் காயம் அடைந்தனர். அவர்க–ளில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்து–வம–னைக்கு அனுப்பி வைக் கப்பட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி போலீஸ் ஏ.டி.எஸ்.பி. குத்தலிங்கம் திரு–வெறும்பூர் டி.எஸ்.பி. அறிவழகன் தலைமையில் 100-க்கும் மேற்ப்பட்ட போலீசார் செய்து இருந்த–னர். விழாவிற்கான ஏற்பா–டு–களை கிராம பட்டை–யதார்கள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள், விழா குழு–வினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News